செஞ்சியில் திடீர் மழை 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தப்பியது
2021-12-31@ 12:34:50

செஞ்சி: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று பெய்த கனமழையால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சம்பா அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. அறுவடையான நெல்லை செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள், நேற்று முன்தினம் 11 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.
நேற்று வந்த நெல் மூட்டைகள் காலையில் வியாபாரிகள் விலைப்பட்டியல் அறிவித்து எடை போடும் பணியும் நடைபெற்று முடிந்தது. பின்னர் வியாபாரிகளுக்கு ஏல முறையில் மூட்டைகள் எடுத்துச்செல்லப்படும் பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் இருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்தது. இதனை உடனடியாக தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு
வி.சி.க நிர்வாகி கொலை
களைகட்டும் தைப்பூச திருவிழா பழநியில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!