மன்னார்குடி- ஜெய்ப்பூருக்கு 1.50 லட்சம் முட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு
2021-12-28@ 12:08:27

மன்னார்குடி: நாமக்கல்லில் இருந்து 1.50 லட்சம் முட்டைகள் நான்கு மினி லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரத்திற்கு பயணிகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப் பட்டது.இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து சாலை போக்குவரத்து மூலமும் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்கள் மூலமும் வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் கொண்டு செல்லப் படுகின்றன.
இந்த நிலையில், நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரு க்கு 1.50 லட்சம் முட்டைகள் 750 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு சாலை மார்க்கமாக நான்கு மினி லாரிகள் மூலம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.
பின்னர், மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு செல்லும் பகல்கீ கோத்தி பயணிகள் விரைவு ரயிலில் முட்டைகள் அடங்கிய பெட்டிகள் ஏற்றப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இப்பணிகளை நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் கோவை குணா மறைவு
பல்லாவரம் நகராட்சி வழக்கு தொடர்பாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு விசைத்தறி முதலாளிகளுடன் கோட்டாட்சியர் பேச்சுவார்தை
பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தடை செய்யப்பட்டவைகளுக்கு பதிலாக மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள்: மாவட்ட கலெக்டர் தகவல்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!