173 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை உடைப்பு: அரியானாவில் பதற்றம்
2021-12-27@ 17:42:54

அம்பாலா: அம்பாலாவில் 173 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியானா மாநிலம் அம்பாலாவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஹோலி ரீடீமர் தேவாலயத்தின் நுழைவாயிலில் இயேசு கிறிஸ்து சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தேவாலய பாதிரியார் பட்ராஸ் முண்டு கூறுகையில், ‘இந்த தேவாலயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 1840ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட 173 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. தேவாலயத்தின் வளாகத்தில் புகுந்த இருவர், சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சம்பவ நாளில் நாங்கள் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணியவில் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக தேவாலயத்தை மூடிவிட்டோம்.
இரவு 10.30 மணியளவில் தேவாலய பிரதான வாயில் மூடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவன் விளக்கை அணைத்துவிட்டு சிலையை உடைத்தான். மற்றொருவன் சிலையை உடைத்த விஷயத்தை மற்றொருவனிடம் போனில் தெரிவித்துக் கொண்டிருந்தான். இவையாவும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சந்தேக நபரின் முகம் தெளிவாக தெரிகிறது. காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். இச்சம்பவம் தொடர்பாக அம்பாலா கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார், சந்தேக நபர்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அரியானாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
இலியானாவுக்கு என்ன நோய்?..மருத்துவமனையில் திடீர் அட்மிட்
ராஜமவுலி, தனுஷ் வெளியிட்ட தசரா டீசர்
ஒரு வருடத்துக்கு பிறகு மகளின் முகத்தை காட்டினார் பிரியங்கா
தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்
ஆன்லைன் பரிசோதனையின் போது பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ்: வாலிபர் கைது
பெண் சீடர் பலாத்காரம் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள்தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!