வேடங்கள் அணிந்து கதையாடல் மூலம் தாமிரபரணி படித்துறை, கல் மண்டபங்களை பாதுகாக்க விழிப்புணர்வு: சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!!
2021-12-27@ 10:55:08

நெல்லை: திருநெல்வேலியின் பாரம்பரிய அடையாளமான தாமிரபரணி படித்துறை மற்றும் கல் மண்டபங்களை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற படித்துறை கதையாடல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தாமிரபரணி நதிக்கரையில் நீண்ட படித்துறை, குறுக்கு துறை கல்மண்டபத்தில் குழந்தைகளுக்கான கதையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலை பண்பாட்டு மன்றம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி மதியழகன் வேடங்கள் அணிந்து குழந்தைகளை குதூகலப்படுத்தினார். சிறுவர்களுக்கு, நீர்நிலைகளை எவ்வாறு பாதுகாப்பது என்றும், படித்துறையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இதைவிட நீண்ட படித்துறை வேறு இல்லை, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் கதையாடல் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார். திருநெல்வேலி படித்துறை பல்வேறு திரைப்படங்களில் காணப்பட்டாலும் அதன் இயற்கை அழகை உள்ளூரில் உள்ள குழந்தைகள் ரசிக்க வேண்டும், படித்துறைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தாமிரபரணி படித்துறை கல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்தனர்.
மேலும் செய்திகள்
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
சித்த மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்
சூளகிரி அருகே எருதாட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் மறியல்: 30 வாகனங்கள் உடைப்பு; போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு; 300 பேர் கைது
சுதந்திர போராட்ட தியாகி 101 வயதில் மரணம்
கொலை வழக்கில் கைதான ஏட்டு அதிரடி சஸ்பெண்ட்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!