நீலகிரியில் வனப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பொதுமக்கள் - வனத்துறையினர் துப்பாக்கியுடன் ரோந்து பணி
2021-12-13@ 16:59:43

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவாலா பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கைவிடப்பட்ட தங்க சுரங்கங்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கம் எடுப்பது குறித்து தகவல் வெளியானது. இதனையடுத்து அங்கு வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வனப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் எடுக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்க சுரங்கங்களை தோண்டி அதிலிருந்து தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் உள்ளூர் மக்கள் 1000திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில் மக்களுடைய வாழ்வாதாரம் கருதி அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அந்த தங்க குழிக்குள் யானைக்குட்டி ஒன்று விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் வனத்துறையினர் அதனை மீது தாயுடன் சேர்த்தனர். அந்த சமயத்தில் அங்கு ஏற்கனவே தோண்டப்பட்ட குழிக்குள் இறந்து 6 மாதங்களாக ஒரு ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இதற்கு வன ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மக்கள் எப்படி அத்துமீறி நுழைந்து தங்கம் எடுக்கிறார்கள் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வனத்துறையும் அந்த பகுதிகளில் அறிவிப்பு பலகைகளை வைத்தும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியும் தங்கம் எடுக்கும் பணிகளை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் ஒருசிலர் அத்துமீறி நுழைந்து அந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று வனத்துறையினர் துப்பாக்கியுடன் அந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்கின்றனர். மர்ம நபர்கள் யாரேனும் அந்தண் பகுதியில் தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனரா? என்ற கோணத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கல்வி உதவி தொகை பெற்ற பிறகு இடை நிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழ்களை கொடுக்க மறுப்பது ஏற்க தக்கது அல்ல: ஐகோர்ட் கிளை
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு
கோவையில் விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்: தண்டவாளத்தில் பழுதடைந்து நின்ற லாரியால் பரபரப்பு; 3,000 பயணிகள் அதிர்ச்சி
தொடரும் வேட்டை!: அரக்கோணம் அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..இந்து சமய அறநிலையத்துறை அதிரடி..!!
நிலச்சரிவால் மூடப்பட்ட கொச்சி - தனுஷ்கோடி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு, சிலைகள் கண்டுபிடிப்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!