வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் மந்தம்
2021-12-08@ 14:38:53

ஈரோடு : தொடர் மழை காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளி சந்தையானது வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு தொடர் மழை மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான வியாபாரிகளே வந்திருந்தனர். இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்தும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லரை வியாபாரம் மட்டும் 40 சதவீதம் வரை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: மழையின் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதேபோல ஒமிக்ரான் பரவல் காரணமாக மாநில எல்லைப்பகுதியில் கெடுபிடிகள் செய்யப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில்லறை வியாபாரம் மட்டும் 40 சதவீதம் வரை நடைபெற்றது. அடுத்த வாரத்தில் இருந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை சீசன் விற்பனை தொடங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!