நெல்லை விடுதியில் 17 வயது மாணவி பலாத்காரம்: பிரபல ரவுடி கைது
2021-12-07@ 19:09:45

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் கோளியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (23). பிரபல ரவுடி. அவர் மீது கோவளம், விழிஞ்ஞம், பூஜப்புரா, வலியதுரை ஆகிய காவல் நிலையங்களில் 16க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் பிரகாஷ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தி சென்றதாக விழிஞ்ஞம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பிரகாஷ் கலிங்கராஜபுரத்தில் உள்ள லாட்ஜில் மாணவியுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பிரகாசை கைது செய்தனர். அவரது பிடியில் இருந்த மாணவியை மீட்டனர். விசாரணையில், மாணவியை ரவுடி பிரகாஷ் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று நாகர்கோவில், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட இடங்களுக்கு பலமுறை அழைத்து சென்று அங்குள்ள லாட்ஜிகளில் அறை எடுத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: பதுக்கிய 3 பேர் மதுரையில் கைது
வழிப்பறி கொள்ளையன் கைது
கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
பள்ளி மாணவியை கர்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!