உள்ளாட்சி தேர்தல் பணியின்போது மரணமடைந்த ஆசிரியர் குடும்பத்துக்கு நிதியுதவி
2021-12-07@ 00:02:30

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் நெய் குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கே.ஹரி (47). கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதையொட்டி ஹரி, தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் பணிக்கு சென்றார். அப்போது, ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தால் ஹரி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு ஹரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் மற்றும் வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் இணைந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதியை, அவரது மனைவி நளினியிடம் வழங்கினர். அப்போது, மாவட்ட செயலாளர் ரமேஷ், வாலாஜாபாத் வட்டார தலைவர் காமாட்சி, வட்டார பொருளாளர் மோகனசுந்தரம் உள்பட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர். மேலும் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக பணி வழங்க தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கோவை விமானநிலையத்தில் பாஜ எம்பி சுனிதா, துக்கலுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வரவேற்பு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் பரிதாப சாவு 20 பேருக்கு பாதிப்பு
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு விவசாயி சரமாரி வெட்டிக்கொலை; மகனுடன் மனைவி போலீசில் சரண்
பாஜவுடன் கூட்டணி வைக்கும் அதிமுக காணாமல் போய்விடும்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு
வெள்ளப் பெருக்கால் குற்றாலம், மெயினருவியில் குளிக்க தடை பழைய குற்றாலம்; ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!