அதிகாலையில் வீடு புகுந்து தொழிலதிபர் காரில் கடத்தல்: மர்ம கும்பலுக்கு வலை
2021-12-06@ 00:01:30

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (30). தொழிலதிபரான இவர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை உள்பட 10 இடங்களில் கோல்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இவரது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராஜசேகர் வீட்டின் கதவை திறந்தார். அப்போது, பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள், ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டு, கத்தி முனையில் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி, கடத்தி சென்றனர்.
இதுபற்றி அவரது மனைவி உஷா, திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், ராஜசேகரை 10 பேர் காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ராஜசேகரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, காஞ்சிபுரத்தில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காஞ்சிபுரம் போலீசார், ராஜசேகரின் செல்போன் சிக்னலை வைத்து, அவர் அடைத்து வைக்கப்பட்டு உள்ள இடம் மற்றும் 10 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை முகப்பேர் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னை வந்த விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர் கைது
கோயில் பூட்டு உடைத்து உண்டியல் கொள்ளை; அம்பத்தூர் அருகே இருவர் கைது
கூடுவாஞ்சேரி அருகே அரசு பெண் அதிகாரி வீட்டில் 32 சவரன் துணிகர கொள்ளை
செங்கல்பட்டு அருகே பேருந்து நிறுத்தத்தில் காந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!
மதுரையில் போலீசார் அதிரடி கஞ்சா விற்ற தம்பதியின் ரூ.5.50 கோடி சொத்து முடக்கம்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;