இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை, பாதுகாப்புப்படையும் பாதுகாப்பாக இல்லை: என்ன செய்கிறது உள்துறை?.. ராகுல் காந்தி கடும் தாக்கு
2021-12-05@ 17:54:40

டெல்லி: இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை என நாகாலாந்து துப்பாக்கிச்சூடுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோகிமா: நாகாலாந்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார். இதனால், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாகாலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகலாந்து முதல்வர் நெபியு ரியோவிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானது இதயத்தை நெருடுகிறது. இந்த நாட்டில் மக்களும் பாதுகாப்பாக இல்லை; பாதுகாப்புப்படையும் பாதுகாப்பாக இல்லை. உள்துறை என்ன தான் செய்கிறது? என கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகள்
உ.பி.யில் தொட்டாலே சரிந்து விழும் செங்கல் சுவர்: யோகி அரசியலில் அடிமட்டம் வரை ஊழல் என அகிலேஷ் யாதவ் விமர்சனம்
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15,940ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!!
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
ராமர் வேடத்தில் நடிக்க ரூ120 கோடி சம்பளம் கேட்கும் பிரபாஸ்
படப்பிடிப்பின்போது மாரடைப்பு: மலையாள நடிகர் காலித் மரணம்
பேச்சுவார்த்தையில் சுமூகம்: தெலுங்கு சினிமா தொழிலாளர் ஸ்டிரைக் வாபஸ்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!