நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க கோரியும் மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்
2021-12-04@ 12:08:45

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க கோரியும் திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்துள்ளார். மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவு தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறிக்கும் விதமாகவும் இருப்பதாக கூறி திமுக தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நீட் தேர்விலிருந்து விலக்கு பெரும் மசோதாவை சட்டமன்றத்திலும் நிறைவேற்றியது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். மாணவர்களின் மருத்துவர் கனவை தகர்க்கும் விதமாகவும், தமிழ்நாட்டின் 70 ஆண்டு கால சுகாதார கட்டமைப்பை சிதைக்கும் விதமாகவும் நீட் தேர்வு இருப்பதாக வில்சன் தனி நபர் மசோதாவில் கூறியுள்ளார். சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தி மற்றொரு தனி நபர் மசோதாவையும் மாநிலங்களவையில் வில்சன் தாக்கல் செய்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேல்முறையீட்டுக்கான உச்சநீதிமன்றத்தை அணுக டெல்லிக்கு செல்வது அனைத்து தரப்பினருக்கும் இயலாத ஒன்றாக இருப்பதால் மண்டல வாரியாக சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டியது அவசியம் என மசோதாவில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அதிகாரத்தை திருத்தம் செய்வதற்கான மசோதா, காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு ஊறு ஏற்பட்டால் காவல்நிலைய அதிகாரியையே பொறுப்பாகும் சட்டதிருத்தத்திற்க்கான மசோதா, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை விசிக எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி..!!
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியீடு..!
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!