புத்தக தாத்தா என்று அழைக்கப்பட்ட முருகேசன் உடல்நலக்குறைவால் காலமானார்: மாணவர்கள், பேராசிரியர்கள் இரங்கல்
2021-12-04@ 10:37:42

மதுரை: புத்தக தாத்தா என்று அழைக்கப்பட்ட முருகேசன் மதுரையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கல்லூரி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கி வந்தார். மதுரை மாட்டம் தண்டலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் 2-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் பழைய பேப்பர் கடை வைத்து நடத்தி வந்தார்.
தனது 40வது வயதில் கடைக்கு வரும் புத்தகங்களை மட்டும் தனியாக பிரித்து சேகரிக்க தொடங்கினர். ஆசிரியர்கள் சிலர் அந்த புத்தகங்களை ஆர்வமாக வாங்கிச் சென்றதையடுத்து அதிகளவு புத்தகங்களை சேகரிக்க தொடங்கினார். நாளடைவில் தான் சேகரித்த அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் பேராசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார்.
இதனால் மாணவர்கள் இவரை புத்தக தாத்தா என்று அழைத்தனர். 80 வயது வரை பல்துறை சார்ந்த எளிதில் கிடைக்காத ஆராய்ச்சி புத்தகங்களை வழங்கி வந்த முருகேசன் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நலகுறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 25ஆயிரம் புத்தகங்களை சேகரித்து வைத்திருந்த முருகேசனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவரது மறைவிற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
இரண்டாம் சீசன் நெருங்குகிறது பூங்கா பராமரிக்கும் பணி தீவிரம்
முதுமலை எல்லை சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக சரிவு: 16 கண் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தம்..!!
தர்மபுரி வன மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ₹138 கோடியில் அகழி, மின்வேலி: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு
நீர்வரத்து 3200 கன அடியாக சரிவு பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்: கரையோர மக்கள் நிம்மதி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!