‘தற்கொலை படை என பேசிய’அரியலூர் மாவட்ட பாஜ தலைவர் கைது
2021-12-04@ 02:48:27

திருச்சி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், ‘‘தற்கொலை படை தாக்குதல் கூட நடத்த தயாராக இருக்கிறோம்’’ என பேசிய அரியலூர் பாஜ மாவட்ட தலைவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா பகுதியில் கடந்த 1ம்தேதி பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பாஜ தலைவர் ஐயப்பன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்பன் பேசுகையில்,‘‘ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காவிட்டால், தற்கொலை படை தாக்குதல் கூட நடத்த தயாராக’’ இருக்கிறோம் என்றார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அரியலூர் போலீசார் பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் ஐயப்பன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் வீட்டில் ஐயப்பன் கைது செய்யப்பட்டார். இதில் கைதான ஐயப்பன், அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர், ஐயப்பனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது: அடைக்கலம் அளித்த போலீஸ்காரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு
திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே பிரபல ரவுடிகளின் தாய்மாமன் ஓடஓட வெட்டி கொலை: 6 பேர் கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வசூலித்து மோசடி வேலூர் ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன முக்கிய ஏஜென்ட்கள் 2 பேர் கைது: உரிமையாளர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
வீட்டிற்கு விளையாட வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சினிமா சிரிப்பு நடிகர் ஏபி.ராஜூ போக்சோ சட்டத்தில் கைது: விருகம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
தனியார் நகைக்கடன் வங்கியில் கொள்ளை அடிக்க ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன்: போலீசில் முக்கிய குற்றவாளி முருகன் பரபரப்பு வாக்குமூலம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!