கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் கனமழை மலைச்சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
2021-12-01@ 14:51:21

கொடைக்கானல்: கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு மலைச்சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துவங்கிய கனமழை நேற்று காலை வரை தொடர்ந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், கொடைக்கானல் - அட்டுவம்பட்டி பிரிவு அருகே மலைச்சாலையின் குறுக்கே பெரிய மரம் விழுந்தது. இதேபோல் கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் பெருமாள்மலையை அடுத்த ஆனைகிரிசோலை பகுதியில் ராட்சத மரம் விழுந்தது.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் மலைச்சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு அல்லது மரங்கள் வேருடன் சாய வாய்ப்பு உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே மழை நேரங்களில் மலைச்சாலைகளில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பயணத்தை தவிர்க்கும் படி கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!