கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டால் புகார் அளிக்கலாம்: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய தலைவர் தகவல்
2021-11-30@ 00:09:26

சென்னை: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் முன்னிலையில் களப்பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக தாட்கோ மூலம் 9 பயனாளிகளுக்கு பருவக் கடனாக ரூ.40,56,300க்கான காசோலையினை ஆணையத் தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.
பின்னர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி யாராவது மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் பொதுமக்கள் உடனடியாக தேசிய உதவி எண் 14420 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார். ஆய்வுக் கூட்டத்தில் சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ஆகாஷ், பொறியியல் இயக்குநர் மதுரைநாயகம் , நிதி இயக்குநர் முத்துகுமாரசாமி, பொது மேலாளர் ராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள்; இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்க துவக்க விழா: பள்ளிக்கல்வித்துறை
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி..!!
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!