நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு
2021-11-30@ 00:02:20

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்று தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதில் தேமுதிக போட்டியிட்ட 60 தொகுதியிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு வாக்கு வங்கி இல்லாத அமமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் என்றும், அமமுகவினர் தேமுதிக வேட்பாளர்களுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்றும் அப்போது தேமுதிக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தவறான கூட்டணியால்தான் தேமுதிக வெற்றிவாய்ப்பை இழந்ததாக தொண்டர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ம் தேதி (நாளை) முதல் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Urban Local Government Election Temutika Single Contest Vijayakand நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேமுதிக தனித்து போட்டி விஜயகாந்த்மேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!