காஞ்சி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
2021-11-29@ 02:03:51

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பெய்துவரும் தொடர் மழையால் பல்லவன்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளிவர முடியாமல் பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார். உடன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உடன் இருந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து இந்தத் தொடர் மழையால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள பல்லவன் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்தும்,சாலைகளிலும் மழைநீரானது தேங்கி நின்று வருகிறது.இதனால் அப்பகுதி மக்களும்,வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள், நிவாரண முகாம்கள், அரசு மருத்துவமனை , வெங்கச்சேரி செய்யாறு பாலம், தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ள செய்யாறு தரை பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு தடை செய்யப்பட்டுள்ள போக்குவரத்தை விரைவாக செயல்படுத்தும் வகையில் பணிகளை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!