உடுமலை-ஆனைமலை சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர்: வடிகால் வசதி செய்து தர கோரிக்கை
2021-11-28@ 14:03:04

உடுமலை: உடுமலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மாற்று வழி பாதையான உடுமலை- ஆனைமலை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ் வழித்தடத்தில் உள்ள கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி இல்லாததால் பருவமழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நீடித்த கனமழை காரணமாக கரட்டுமடம் சாலை தெப்பம் போல உருமாறியது. சாலையில் தேங்கிய தண்ணீர் அருகில் இருந்த குடிசைகளுக்கு புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி செய்து கொடுத்தால் மலை காலங்களின்போது சாலைகளில் தண்ணீர் தேங்காது. தொடர் மழையால் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாவது உடன் துர்நாற்றம் வீசி வருவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நீடிப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இனி வரும் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டம்: ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க நடவடிக்கை...
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி
கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது.: ஐகோர்ட் கிளை
கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது; சிறையில் அடைப்பு
கோதையாறு மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்-பயணிகள் இல்லாததால் விபரீதம் தவிர்ப்பு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!