வத்திராயிருப்பு அருகே பாலம் உடனே கட்ட விவசாயிகள் கோரிக்கை
2021-11-28@ 11:18:08

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியிலிருந்து தலமலையான் கோயில் வரை செல்லக்கூடிய பாதையில் தார்ச்சாலை இல்லாமல் இருந்து வருகிறது. தம்பிபட்டியிலிருந்து இந்த சாலை வழியாக செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சியில் மலையில் கடந்த சில 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக செட்டிகுறிச்சி கண்மாய்க்கு செல்லக்கூடிய ஓடையில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்றது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயப்பணி நடந்து வருகிறது. ஓடையில் அதிக தண்ணீர் சென்றதால் இந்த வயல்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
தண்ணீர் குறைந்த பின்பு ஓடையை கடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த ஓடையில் பாலம் மற்றும் சாலையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் மழை பெய்யும் காலங்களில் மக்கள் அவதிப்பட வேண்டிய நிலைய தொடருகிறது. இதனால் தம்பிபட்டியிலிருந்து செல்லக்கூடிய இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றவும், இந்த ஓடையில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அஞ்சுகிராமம்-வழுக்கம்பாறை சாலை அகலப்படுத்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில், வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
418 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் கோலாகல ஏற்பாடுகள்; பக்தர்கள் குவிந்தனர்
கோவை விமானநிலையத்தில் பாஜ எம்பி சுனிதா, துக்கலுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வரவேற்பு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் பரிதாப சாவு 20 பேருக்கு பாதிப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!