மேலூர் அருகே பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்; மாணவர்கள் அவதி
2021-11-28@ 10:04:02

மேலூர்: மேலூர் அருகே மழையால் கண்மாய் நீர் நிரம்பி, அருகில் உள்ள அரசு பள்ளிக்குள் பாய்ந்ததால், பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலூர் அருகில் உள்ள கொடுக்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள கண்மாய், தொடர் மழையால் நிரம்பி வெளியேற துவங்கியது. இத்தண்ணீர் அருகில் உள்ள இப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், 10ம் வகுப்பு மாணவர்களை மட்டும், அருகில் உள்ள தொடக்க பள்ளிக்கு அழைத்து சென்று பாடம் எடுத்தனர். மற்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தேயிலை தோட்டங்களை சூழ்ந்த சோலையார் அணை வெள்ளம்
உத்தமபாளையம் வனப்பகுதிகளில் வன உயிரினங்களை காப்பதற்கு மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்படுமா?: வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் குறுவை பயிருக்கு ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை உரம் தெளிப்பு: புதிய முயற்சியில் விவசாயி மும்முரம்
உணவுக்குழாயில் சிக்கிய பீட்ரூட் சிகிச்சையால் உயிர் தப்பிய பசுமாடு
அதிமுக ஆட்சியில் ரூ.49 லட்சம் அம்போ... பங்காருசாமி கண்மாய் சீரமைக்கப்படுமா?: போடி பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
காங்கயம் அருகே 24 ஆண்டுக்கு பிறகு கத்தாங்கன்னி குளம் நிரம்பியது: கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!