பெங்களூருவில் பரபரப்பு தெ.ஆப்ரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று?
2021-11-28@ 00:16:06

பெங்களூரு: தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் புதிதாக பரவியுள்ள ‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவுவதை தடுக்க அனைத்து மாநில அரசு களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, தென் ஆப்ரிக்கா உட்பட இந்த வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 14 மாநாடு களில் இருந்து இந்தியா வந்துள்ள வர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு இந்த மாதம் 1ம் தேதியில் இருந்து கடந்த 26ம் தேதி வரையில் 95 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பெங்களூருவில் தங்கியிருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இது, ‘ஓமிக்ரான்’ தொற்றாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இவர்கள் 2 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இவர்களை தாக்கி இருப்பது ஓமிக்ரான் வைரசா என அறிய, அடுத்தக்கட்ட பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags:
Bangalore South Africa 2 people Omigran infection? பெங்களூரு தெ.ஆப்ரிக்கா 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று?மேலும் செய்திகள்
கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு
உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்ததால் கொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை: ராஜஸ்தான் அரசு முடிவு
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..