கேரளாவிலும் சிறப்பு சேவை தொடங்கியது வாழைக்குளம் அன்னாசி பழம் விவசாய ரயிலில் பயணம்
2021-11-26@ 00:05:05

* கேரளாவில் ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 5.5 லட்சம் டன் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது.
* வாழைக்குளம் அன்னாசியின் மீது வட மாநில மக்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உண்டு.
கொச்சி: கேரளாவின் வாழைக்குளம் பகுதியில் இருந்து டெல்லிக்கு முதல் முறையாக விவசாயிகள் ரயில் திட்டத்தின் கீழ் 2.5 டன் அன்னாசி பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வாழைக்குளத்தில் விளைவிக்கப்படும் அன்னாசி பழங்கள் பிரபலமானவை. வழக்கமாக இங்கிருந்து லாரிகள் மூலமாக டெல்லிக்கு அன்னாசி பழங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த லாரிகள் டெல்லி சென்றடைவதற்கு 5 நாட்களாகும். தற்போது, ஒன்றிய அரசு விவசாய விளைப்பொருட்களை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய, ‘விவசாயிகள் ரயில் சேவை’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மகாராஷ்டிரா, பீகாரில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது கேரளாவிலும் இந்த ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்த ரயில் மூலமாக 50 மணி நேரத்தில் விளைபொருட்கள் டெல்லி சென்றடைந்து விடும். கேரளா விவசாயிகள் சங்கம் சார்பாக முதல் முறையாக நேற்று 2.5 டன் அன்னாசி பழங்கள், எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்தில் இருந்து நிசாமுதீன் எக்ஸ்பிரஸ் விவசாய ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் ஜார்ஜ் கூறுகையில், “முதல் முறையாக ரயிலில் நாங்கள் பழங்களை அனுப்பி வைத்துள்ளோம். இது வெற்றி பெற்றால் தொடர்ந்து அதிக அளவில் பழங்களை அனுப்பி வைப்போம்,” என்றார்.
Tags:
Kerala Special Service Banana Pine Pineapple Travel by Agricultural Train கேரளா சிறப்பு சேவை வாழைக்குளம் அன்னாசி பழம் விவசாய ரயிலில் பயணம்மேலும் செய்திகள்
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான பேச்சு: கேரள மாஜி அமைச்சர் மீது வழக்கு
கர்நாடகாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 3 பேர் பரிதாப பலி
மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
டாக்டரை கரம் பிடித்தார்; பஞ்சாப் முதல்வர் திருமணம் எளிமையாக நடந்தது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு
உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்ததால் கொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை: ராஜஸ்தான் அரசு முடிவு
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..