போதுமான அளவு உற்பத்தி இருப்பதால் உரத் தட்டுப்பாடு இல்லை: ஒன்றிய அமைச்சர் தகவல்
2021-11-24@ 06:14:42

புதுடெல்லி: ‘நாட்டில் எங்கும் உரத் தட்டுப்பாடு இல்லை. யூரியா உரத்தை தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படுத்துவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். ஒன்றிய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு உட்பட 18 மாநில வேளாண் அமைச்சர்களுடன் நேற்று காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி தேவையான உரத்தை எந்த தாமதமும் இன்றி ஒன்றிய அரசு விநியோகித்து வருகிறது. போதிய உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, நாட்டில் எங்கும் உரத் தட்டுப்பாடு இல்லை. எனவே, உர விநியோகம், தேவையை மாநில அரசுகள் தினசரி அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். அதே சமயம், தொழிற்சாலை பயன்பாட்டிற்கு யூரியா உரத்தை மாற்றுவதை மாநில அரசுகள் தடுத்து, வேளாண் துறைக்கு போதுமான உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Production Rath Shortage No Union Minister Info உற்பத்தி ரத் தட்டுப்பாடு இல்லை ஒன்றிய அமைச்சர் தகவல்மேலும் செய்திகள்
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தை நாட போலீசார் முடிவு
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி
மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்
நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு
100வது நாளை எட்டும் உ.பி. அரசு இலக்குகளை அடைய அமைச்சர்களுக்கு யோகி உத்தரவு
காத்மாண்டில் பானிபூரிக்கு தடை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;