பல்கேரியாவில் பேருந்து விபத்து: 45 பேர் பலி
2021-11-24@ 00:15:48

சோபியா: பல்கேரியாவின் சோபியா நகரில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2 மணிக்கு திடீரென பேருந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் ஸ்டீபன் யானேவ் பார்வையிட்டார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். பேருந்து வடக்கு மெசிடோனியாவில் பதிவு எண்ணுடன் உள்ளது. பேருந்தில் வந்த அனைவரும் அங்கிருந்து பல்கேரியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது: குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தகவல்!!
1 லிட்டர் பெட்ரோல் ரூ. 450 ஆக அதிகரிப்பு... இந்தியாவிடம் ரூ.38,000 கோடி கடன் கேட்க இலங்கை அரசு முடிவு!!
கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஜோ பைடன் பாராட்டு..!
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் தனி ஆளாக பேச்சுவார்த்தை நடத்த தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கல்?.. உறவினர் தகவல்
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!