இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது..!!
2021-11-23@ 16:10:57

இஸ்ரேல்: இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா கொல்லுயிரியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் நாடு இஸ்ரேல். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியதால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என அறிவித்த நாடும் இஸ்ரேல் ஆகும். ஆனால் அங்கு கோடை காலத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கூட கொரோனாவால் தாக்கப்பட்டனர். அதிலும் அண்மை காலமாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம். இந்நிலையில், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்தியாவிலும், குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 2022 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் அழிவுப்பாதை: கைவிடப்பட்ட பருவநிலை கொள்கை; திறக்கப்படும் நிலக்கரி சுரங்கங்கள்
ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 தடை
40க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு குரங்கம்மை அவசர நிலை இப்போது தேவை இல்லை: உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரை
உச்ச நீதிமன்ற தடையால் புது முடிவு கருக்கலைப்புக்கான செலவை ஏற்கும் அமெரிக்க நிறுவனங்கள்
கடும் நெருக்கடிக்கு இடையே பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் அதிகரிப்பு: ஒரு லிட்டர் ரூ.470, ரூ.460
ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு ஒவ்வொரு இந்தியன் மரபணுவிலும் ஜனநாயகம்: ஜி-7 மாநாட்டில் பங்கேற்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!