தமிழகத்தில் மேலும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணதாரர்களை ஆதார் மூலம் அடையாளம் காணும் நடைமுறை டிச.1ம் தேதி முதல் அமல்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தகவல்
2021-11-21@ 07:15:10

சென்னை:ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் ஆவணதாரர்களை ஆதார் வழியில் அடையாளம் காணும் நடைமுறை மேலும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தெரிவித்தார். தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவணதாரர்களை ஆதாரம் வழி அடையாளம் காண புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 109 அலுவலகங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் 100 அலுவலகங்களுக்கு விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்தில் மாதவரம், செம்பியம், படப்பை, பம்மல், கோடம்பாக்கம், 2ம் எண் இணை சார்பதிவகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் 1ம் எண் இணை சார்பதிவகம், திருவலங்காடு, நெல்லை மண்டலத்தில் செங்கோட்டை, தென்காசி 1ம் எண் இணை சார்பதிவகம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், அருமனை, மார்த்தாண்டம் 1ம் எண் இணை சார்பதிவகம், நாங்குநேரி, வள்ளியூர், கடம்பூர், எட்டையபுரம், இரணியல், ராஜாக்கமங்கலம், தூத்துக்குடி 1ம் எண் இணை சார்பதிவகம், மேலூர்-தூத்துக்குடி, மதுரை மண்டலம் இளையான்குடி,
மேலும் செய்திகள்
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...