கொரோனாவை போன்று சீன இறைச்சி சந்தையில் 18 ஆபத்தான வைரஸ்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
2021-11-17@ 21:14:58

பீஜிங்: கொரோனா தொற்று நோயை போன்று சீனாவின் இறைச்சி சந்தையில் 18 வகையான ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூஹான் மகாணத்தில் கடந்த 2019ல் பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 25.50 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று நோயானது வூஹானில் உள்ள கடல் உணவு இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே மேலும் ஆபத்தான 18 வகையான வைரஸ்கள் உள்ளதாக சீனா, அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து சீனாவில் உள்ள நாஞ்சிங் விவசாய பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆசிரியர் ஷுவோ சு கூறுகையில், ‘SARS-CoV மற்றும் SARS-CoV-2 வைரஸ் கிருமிகள் பரிசோதிக்கப்பட்டன. நாடு முழுவதும் 1,725 விலங்குகளின் மாதிரிகள் எடுத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அதில் 71 பாலூட்டி விலங்குகளில் வைரஸ்களைக் கண்டறிந்துள்ளோம். இவற்றில் 18 வகையான வைரஸ்கள் மனிதர்களை தாக்கக் கூடியவை. மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் வகைகள் SARS-CoV போன்ற வடிவத்தில் இல்லை. மாறாக SARS-CoV-2 வகையான வைரஸ்களாக உள்ளன. ஹுவாங்டாங் மற்றும் குவாங்சி மகாணங்களில் இந்த வைரஸ்கள் உள்ளன’ என்றார்.
மேலும் செய்திகள்
லும்பினியில் பிரதமர் மோடி பேச்சு நேபாளத்துடனான உறவு வலுவானது
இம்ரானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்..! மாஜி அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பரபரப்பு பேட்டி
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது: பிரதமர் ரணில் பேச்சு
போனில் ஆர்டர் செய்தால் போதும்...! டேபிள் தேடிவந்து உணவு பரிமாறும் ‘ரோபோ’..! வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!