உடல் உறுப்பு தானம் செய்ய, பெற ஆதார் அட்டை கட்டாயம் தமிழக அரசு உத்தரவு
2021-11-16@ 00:04:53

சென்னை: தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானம் பதிவு செய்வோர் உண்டு. இதுபோக, விபத்துகளில் மூளைசாவு அடைந்தோர்களின் உடல் உறுப்புகளும் தானமாக வழங்கப்படும். இதேபோல், உடல் உறுப்பு தானத்தில் சிலர் போலியான ஆதார் எண்களை கொடுத்து முறைகேடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இந்தநிலையில், உடல் உறுப்பு தானம் செய்வதற்கும், பெறுவதற்கும் புதிய கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, உடல் உறுப்பு தானத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆகியோர் ஆதார் அட்டை எண் அடிப்படையில் சேவைகளை பெற முடியும். மேலும், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆதாரின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!