பிரான்ஸ் இதழ் அறிக்கை ரபேல் ஒப்பந்தத்தை பெற ரூ.650 கோடி கமிஷன்
2021-11-09@ 02:31:16

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற உதவிய இந்திய இடைத்தரகருக்கு பிரான்சின் டசால்ட் நிறுவனம் போலி ரசீதுகள் மூலம் ரூ.650 கோடி கமிஷன் கொடுத்திருப்பதாக பிரான்ஸ் புலனாய்வு இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அவரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி ரபேல் ஒப்பந்தத்தை சில மாற்றங்களுடன் இறுதி செய்தார். அதன்படி, பறக்கும் நிலையில் 36 விமானங்களை ரூ.59,000 கோடியில் வாங்க ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதில் பல்வேறு முறைகேடு நடத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டதை விட பல கோடி கூடுதல் விலை கொடுத்து விமானங்கள் வாங்கப்படுவதாக கூறியது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடியாக முடிவு செய்யப்பட்ட நிலையில், ஒன்றிய பாஜ அரசு ஒரு விமானத்தை ரூ.1670 கோடி கொடுத்து வாங்குவதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில், பிரான்சை சேர்ந்த புலனாய்வு செய்தி இதழான மீடியாபார்ட் கடந்த ஏப்ரலில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், ‘டசால்ட் நிறுவனம் ரபேல் விமானங்களை இந்தியாவிடம் விற்கும் ஒப்பந்தத்தை பெற ரூ.650 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. இந்த பணம் ஒப்பந்தத்தை பெற உதவி செய்ததற்காக இந்தியாவின் இடைத்தரகர் சுஷன் குப்தா என்பவருக்கு சில போலி நிறுவன ரசீதுகள் மூலமாக ரூ.650 கோடி கமிஷன் கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது’. இந்த முறைகேடு குறித்தும், இது தொடர்பான ஆவணங்களும் 2018ம் ஆண்டிலேயே சிபிஐக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி உள்ளது. ஆனால், ஆவணங்களின் உண்மைத் தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
Tags:
France magazine report Raphael deal Rs 650 crore commission பிரான்ஸ் இதழ் அறிக்கை ரபேல் ஒப்பந்த ரூ.650 கோடி கமிஷன்மேலும் செய்திகள்
இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது: குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தகவல்!!
1 லிட்டர் பெட்ரோல் ரூ. 450 ஆக அதிகரிப்பு... இந்தியாவிடம் ரூ.38,000 கோடி கடன் கேட்க இலங்கை அரசு முடிவு!!
கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஜோ பைடன் பாராட்டு..!
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் தனி ஆளாக பேச்சுவார்த்தை நடத்த தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கல்?.. உறவினர் தகவல்
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!