எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார்; அதனால் தான் வார்த்தைகளை பயந்து பயந்து பேசுகிறார்!: டி.டி.வி. தினகரன் விமர்சனம்
2021-11-06@ 15:05:48

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பலவீனமடைந்துவிட்டதாகவும், அதனால் தான் வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தின் இடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசிகலா மற்றும் தனது நோக்கம் ஒன்றே என்றும் அது அதிமுகவை மீட்பது தான் என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருப்பதாகவும், அதனாலேயே வார்த்தைகளை பயந்து பயந்து பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொண்டர்களின் மனநிலை பற்றியே தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பது வழக்கம். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் பலவீனம் அடைந்துவிட்டார் என்று டிடிவி தினகரன் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே தெரிவித்து இருப்பதாக கூறினார். அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும் கூட்டத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை பெற புதிய இணையதளம்: தமிழக அரசு அறிவிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தைப்பூசத் திருவிழா பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 20 நாட்களுக்கு அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு பிப்.8ல் எழுத்து தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம்
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்.15ம் தேதி வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி; இனி கால நீட்டிப்பு கிடையாது
தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத சென்னையை மக்கள் பார்ப்பார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!