நூல் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் அதிர்ச்சி
2021-11-01@ 14:33:31

திருப்பூர்: நூல் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளதாக பின்னலாடைத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பின் ஆர்டர்கள் வர தொடங்கி உள்ள நிலையில் நூல் விலை உயர்வு அதிர்ச்சியளிப்பதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து பெற்ற ஆர்டர்களை முடித்து கொடுக்கும் போது பின்னலாடை உற்பத்தி நிலையங்கள் இழப்பை சந்திக்கும். ஒரு கிலோ நூலில் 4 பனியன்கள் தயாரிக்கலாம் எனும் நிலையில், நூல் விலை உயர்வு காரணமாக பனியன் ஒன்றின் விலை ரூ.15 வரை அதிகரிக்கும்.
நூல் வர்த்தகம் ஏற்றுமதி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.300ஆக இருந்த ஒரு கிலோ நூல் விலை தற்போது ரூ.350ஆக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.20 ஒரே முறையாக அதிகமானது. அதன்பிறகு 50 ரூபாய் விலை உயர்வு என்பது மிகவும் அதிகமாகும். இதற்கு மூலகாரணமாக பருத்தியின் விலை அதிகமானதே ஆகும். இதனால் ஆடைகள் விலை உயரும்.
இதுவரை விலை உயர்ந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை என்ற அளவில் இருக்கும். தற்போது ரூ.50 ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளனர். ஏற்றுமதி ஆர்டர்கள் 3 மாதம், 4 மாதங்களுக்கு முன்னதாக மாதிரி காண்பிக்கப்பட்டு ஆர்டர்கள் எடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்த விலை உயர்வு பனியன் நிறுவனங்களை முற்றிலும் பாதிக்கும். பருத்தியின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப விலை உயர்வது வழக்கம். ஆனால் இந்த முறை அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக தெரியவில்லை என்று பனியன் நிறுவன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பிறகு ரூ.5 - 10 வரை விலை உயர்ந்தது. நூல் கிடைக்காத தட்டுப்பாடு நிலை இருந்தது. உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையை விட ஏஜெண்டுகளிடம் கூடுதலாக விலை கொடுத்து வாங்கும் சூழல் இருந்தது. நூல் வரத்து சரியான பிறகு திடீரென ரூ.50 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் பன்னீர்செல்வம்: அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி
மீட்பு பணியில் மந்தம்: கடற்கரையில் மயக்க நிலையில் நான்கு மணி நேரமாக உயிருக்கு போராடும் இலங்கை அகதிகள்
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!: பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி!!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கணவன், மனைவி தஞ்சம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!