வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு கடன் உதவி
2021-10-29@ 00:16:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வங்கி வாடிக்கையாளர்களை நோக்கிய தொடர்பு முகாம் காஞ்சிபுரம் பல்லவன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டல மேலாளர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தார். அனைத்து வங்கிகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை இந்தியன் வங்கியின் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இம்முகாமில் 20 வங்கிகள் மற்றும் 5 அரசு அலுவலகங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கடனுதவிகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள். முகாமில் 1834 பயனாளிகளுக்கு 113 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். விழாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் ஆஷித்ரஞ்சன் சின்கா, பேங்க் ஆப் பரோடா உதவி பொது மேலாளர் டிஎம் பதான், கனரா வங்கி உதவி பொது மேலாளர் ஜே சிவகுமார் உள்பட பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சண்முகராஜ் செய்திருந்தார்.
Tags:
Banking customer contact beneficiary loan assistance வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு பயனாளி கடன் உதவிமேலும் செய்திகள்
கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை
ஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்
காவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி
மின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்
அனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!