தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன?... தலைமை செயலாளர் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
2021-10-28@ 02:21:19

சென்னை: கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலங்களை சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது. எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். அதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைப்பாட்டை தலைமை செயலாளர் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
மேலும் செய்திகள்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூலிக்கும் அமைப்புகள் எவை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
புலி பட சம்பள விவகாரம்; நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கு: வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை.! ஐகோர்ட் உத்தரவு
ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!