கிண்டி நட்சத்திர ஓட்டலில் போதையில் ரகளை 2 பெண்கள் கைது
2021-10-26@ 00:45:17

ஆலந்தூர்: தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சவுமியா (35). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மீரா (32). ஆன்லைன் டிரேடிங் நடத்தி வருகிறார். தோழிகளான இவர்கள், நேற்று முன்தினம் இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று, மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதுகுறித்து ஒட்டல் மேலாளர் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், அங்குவந்த போலீசார், போதையில் ரகளை செய்த 2 பெண்களையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதையடுத்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மீராவை கைது செய்தனர். சவுமியாவை தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
பூந்தமல்லியில் சொந்த வீட்டில் 550 பவுன் திருடிய விவகாரம்; தொழிலதிபர், மாடல் அழகியை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை ஓசோன் கேபிடல் நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் 30 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது: அடைக்கலம் அளித்த போலீஸ்காரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு
திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே பிரபல ரவுடிகளின் தாய்மாமன் ஓடஓட வெட்டி கொலை: 6 பேர் கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!