கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
2021-10-24@ 11:09:36

சென்னை: சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பண்டிகை காலம் என்பதால் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; மக்கள் கூடும் இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. Face Detection மூலம் 7,000-க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கஞ்சா கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா கடத்தியதற்காக 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். சென்னை சாந்தோமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை இயக்குநர் கிருத்திகா உதயநிதி துவக்கி வைத்தார். நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்றார். பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி; மார்பக புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு இருந்தாலே அச்சப்பட தேவையில்லை. குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை என கூறினார்.
மேலும் செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
திருத்திய திட்ட அறிக்கை வெளியீடு பள்ளி, கல்லூரிகளில் 10371 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு; தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிட்டால் செலவு அதிகமாகி பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை
சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிப்பதை தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கை
விளம்பரத்திற்காக வழக்கு தொடர்வதா?... இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!