சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு.. பள்ளிகளை மூட உத்தரவு; 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!!
2021-10-22@ 11:23:05

பெய்ஜிங் : சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அனைத்துப் பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.தொடர்ந்து 5வது நாளாக தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது.தொற்று பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைபிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.கொரோனா பரிசோதனைகளையும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது சீன சுகாதாரத்துறை.
வெளிநாடு ஒன்றில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா வந்த மூத்த தம்பதியிடம் இருந்து தான் கொரோனா பரவியதாக சீன அரசு சந்தேகித்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் மூத்த தம்பதியுடன் வந்த சுற்றுலாப் பயணிகள், அவர்கள் சென்ற மாகாணங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.ஷாங்காய், லியான், இன்சு உள்ளிட்ட 5 மாகாணங்களில் கண்காணிப்பை சீனா தீவிரப்படுத்தி உள்ளது.வடமேற்கு சீனாவில் உள்ள வான்சூ நகரில் இருந்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இன்றி வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மாங்கோலியாவிலும் எந்த நகரத்தில் இருந்தும் மக்கள் வெளியேறத் தடை விதித்துள்ளது சீன அரசு.
மேலும் செய்திகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு
பாக். ஆல்-ரவுண்டரின் திருமண போட்டோஷூட்: சமூக வலைதளத்தில் வைரல்
இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு: திரிகோணமலையிலிருந்து மாஜி பிரதமர், மகன் எஸ்கேப்?
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்
வடகொரியாவில் பிடியை இறுக்கும் கொரோனா கிருமி...மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்திற்கு கிம் உத்தரவு
கார்கிவிலிருந்து ரஷ்ய படை விரட்டியடிப்பு; போரில் உக்ரைன் கை ஓங்குகிறது: டான்பாஸையும் மீட்க தீவிர சண்டை
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!