சர்வதேச எண்ணெய், எரிவாயு நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!: முதலீடு, கூட்டிணைவுக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்..!!
2021-10-20@ 10:16:20

டெல்லி: சர்வதேச எண்ணெய், எரிவாயு நிறுவன தலைவர்கள் மற்றும் வல்லுனர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், இன்று மாலை 6 மணியளவில் சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வல்லுனர்களுடன் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளதாக கூறியுள்ளது. இந்தியா உடனான முதலீடு, கூட்டிணைவுக்கான வாய்ப்புகள் குறித்தும் அப்போது விரிவாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்கான வாய்ப்பை கண்டறிதல், உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டமிடல், எரிசக்தி சுதந்திரம், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் உள்ளிட்டவை ஆலோசனையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களில் மாசு குறைப்பு நடவடிக்கைகள், இயற்கை எரிவாயு மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டங்கள் குறித்தும் வல்லுனர்களுடன் இன்று மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். 2016ம் ஆண்டுக்கு பின்னர், நடைபெறும் 6வது ஆலோசனை கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!