கோ-ஆப்டெக்ஸில் பண்டிகை கால சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்
2021-10-20@ 00:37:44

திருவள்ளூர்: திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பண்டிகை கால சிறப்பு முதல் விற்பனையை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் புதிய துணி ரகங்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, `தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டு ரூ1.25 கோடி விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களிடமிருந்து மாதந்தோறும் ரூ300 முதல் ரூ5 ஆயிரம் வரை 10 மாத தவணைகள் பெறப்படுகிறது. 11 மற்றும் 12வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துகிறது. கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.
தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் வாங்கி அதை பயன்படுத்தி நெசவாளர்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (தணிக்கை) குணசேகரன், விற்பனை நிலைய மேலாளர் துளசிதாஸ், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் அதிக விமானங்களை கையாளும் வகையில், 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிவு!!
தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்?.. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!