லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது.: ஒருவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல்
2021-10-19@ 11:45:48

லக்கிம்பூர்: லக்கிம்பூரில் வாகனம் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்துக்குள் காரை ஏற்றியதால் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து நடந்த வன்முறை நிகழ்வுகளில் மேலும் 4 பேர் பலியாகினர். இந்த வன்முறை காரணமாக மொத்தம் 9 பேர் உரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல எதிர்ப்புகள், கண்டனங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் ஒன்றிய அமைச்சரின் மகன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாஜக-வை சேர்ந்த சுமித் ஜெயிஸ்வால் என்பதும், இவர் விவசாயிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விசாரணையில், நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 பேரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
அடுத்த 20,30 ஆண்டுகளுக்கு பாஜகவைமையப்படுத்தி இந்திய அரசியல் இருக்கும்: பிரஷாந்த் கிஷோர்
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தை: அறுவை சிகிச்சையில் ஆச்சரியம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!