கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் துணிகரம்
2021-10-18@ 21:16:22

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் ரூ.7 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி ஏஎல்சி சர்ச் வளாக பகுதியில் குடியிருந்து வருபவர் மதிவாணன் மகன் விஜய்தேவகுமார் (46). இவர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியில் அருகருகே 2 வீடுகள் உள்ளன. வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு சாப்பிட்டுவிட்டு தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் அனைவரும் தூங்கியுள்ளனர்.
பின்னர் இன்று காலை எழுந்து பார்த்தபோது, வடக்கு புறம் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜய்தேவகுமார் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, 15 பட்டுப்புடவை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்து
சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!