மைதானத்தை அபகரித்தால் கையை வெட்டி விடுவேன்: திரிணாமுல் எம்எல்ஏ மிரட்டல்
2021-10-18@ 01:15:43

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட கமராதி தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருப்பவர் மதன் மித்ரா. இவர், இம்மாநில முன்னாள் விளையாட்டு துறை அமைச்சராவார். தனது தொகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை அபகரித்து, திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கமான சிலர் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் மதன் மித்ரா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பதிவில், ‘நானும், எம்பி சவுகத்தா ராயும் விளையாட்டு மைதானத்தை அழகுப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், சில கிரிமினல்கள் இதில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட முயற்சிக்கின்றனர். இதில், சம்பந்தபட்ட 3 பேர் மீதும் புகார் கொடுப்பேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களுடன் சேர்ந்து மைதானத்தை காப்பாற்றுவேன்.
அவர்கள் என்னை மிரட்டலாம் அல்லது விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர். அவர்கள் மைதானத்தில் சுண்டு விரலை வைத்தாலும் கூட, அவர்களின் கைகளை வெட்டி விடுவேன்,’ என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்