பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசப்போவதில்லை: பெட்ரோலிய அமைச்சர் ஹாதீப் சிங் பேச்சால் சர்ச்சை
2021-10-17@ 17:00:03

டெல்லி: கொரோனா தளர்வுகளுக்கு பின் பெட்ரோல், டீசலின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹாதீப் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் விலை உயர்வு குறித்து பேசப்போது இல்லை என அவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்; இந்த தகவலை தெரிவித்தார். கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது தற்போது பெட்ரோல் 15% வரையிலும், டீசல் பயன்பாடு 10% வரையிலும் அதிகரித்திருப்பதாக ஹாதீப் சிங் தெரிவித்தார்.
இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து எதுவும் பேசப்போவதில்லை என தெரிவித்த அவர்; விலை ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஆனால் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எந்த நாவடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் டீசல் விலையும் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி பேசாமல் இருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!