மெக்சிகோவில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என தேடுதல் ஆணையம் அறிவிப்பு
2021-10-15@ 14:22:45

மெக்சிகோ நாட்டில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மெக்சிகோ நாடு, போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை பொது வெளியில் சுட்டுக்கொன்றுவிட்டு தப்புதல் உள்ளிட்ட குற்ற செயல்களின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தலுக்காக சட்ட விரோதமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் மெக்சிகோவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அந்நாட்டின் தேசிய தேடுதல் ஆணையம் அறிவித்துள்ளது. காணாமல் போன தங்கள் குடும்பத்தினரை ஆற்றங்கரையின் ஓரத்திலும், காடுகளிலும் தேடும் பணியில் பலர் வேதனையுடன் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு செப். மாதத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற 43 பள்ளி மாணவர்கள் என்ன ஆனார்கள் என இதுவரை தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
லும்பினியில் பிரதமர் மோடி பேச்சு நேபாளத்துடனான உறவு வலுவானது
இம்ரானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்..! மாஜி அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பரபரப்பு பேட்டி
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது: பிரதமர் ரணில் பேச்சு
போனில் ஆர்டர் செய்தால் போதும்...! டேபிள் தேடிவந்து உணவு பரிமாறும் ‘ரோபோ’..! வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு
நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு..!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!