கொடைக்கானலை போல் மீண்டும் ஒரு கூத்து குளத்தில் மிதந்த போதை ஆசாமி -திண்டுக்கல் அருகே பரபரப்பு
2021-10-08@ 13:00:47

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மதுபோதையில் குளத்தில் மிதந்தவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ளது கொட்டப்பட்டி குளம். நேற்று இந்த குளத்தில் சுமார் 3 மணிநேரமாக ஆண் ஒருவர் இறந்தது போல் மிதந்து கொண்டிருந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை கண்டு குளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஊருக்குள் தகவல் பரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்ததும் ஏடிஎஸ்பி லாவண்யா, திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தினகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது குளத்தில் மிதந்தவர் உயிருடன் இருப்பது தெரிந்தது. பின்னர் அவரை மீட்டு விசாரித்ததில் கொட்டப்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் (32) என்பதும், மதுபோதையில் அவர் மிதந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடைக்கானல் ஏரியில் மதுபோதையில் மிதந்த ஒருவரை போலீசார் எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு பகுதி கோயில்களில் தீமிதி திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் பலி
ஊராட்சி அலுவலகத்தில் புகுந்த மண்ணுளி பாம்பு: பத்திரமாக மீட்பு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!