செவ்வாய் கிரகத்தில் நீர்நிலை இருந்ததற்கான கூடுதல் ஆதாரம் : ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படம் மூலம் நாசா உறுதி!!
2021-10-08@ 10:13:12

வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் கிடைத்துள்ள இந்த புகைப்படம் செவ்வாயில் நீர்நிலை இருந்ததற்கான ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற பெயரில் விண்கலத்தை நாசா அனுப்பியது. சுமார் 7 வாரங்கள் பணம் செய்து செவ்வாயை அடைந்த பெர்சவரன்ஸ் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் ezero என்ற பள்ளத்தாக்கில் இருந்து தற்போது அனுப்பி உள்ள ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படங்கள் செவ்வாயில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. இந்த புகைப்படங்கள் புதையுண்ட ஏரி உருவாக்கிய ஆற்றுப்படுகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆற்றுப் படுகையின் கீழே உள்ள 3 அடுக்குகளின் வடிவங்கள் நீர் தொடர்ந்து ஓடியதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் சுழற்சி இருந்திருக்கலாம் என்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆற்றுப் படுகையின் புகைப்படங்கள் புவி எல்லையை ஒட்டி இருப்பதாக நாசா கூறியுள்ளது. ஆற்றுப படுகையை கடந்து புதையுண்ட ஏரியின் கரையை மற்றும் பள்ளத்தாக்கின் விளிம்புகளை ரோவர் புகைப்படங்களாக எடுத்து அனுப்ப உள்ளது. அதன் முடிவில் செவ்வாய் குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை