கொரோனாவால் மேலும் 10 கோடி பேர் ஏழைகளானர்.. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.3% ஆக இருக்கும் : உலக வங்கி கணிப்பு!!
2021-10-07@ 12:11:15

வாஷிங்டன்: 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மட்டுமே 2020ம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து 7.1 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்த ஆண்டு தெற்காசியாவில் 4.8 கோடியிலிருந்து 5.9 கோடி மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனிடையே 2021-2022ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.3%ஆக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையில் இந்திய ஜிடிபி வளர்ச்சி 8.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.உள்நாட்டின் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க மேற்கொண்ட திட்டங்களின் பயனாக பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த உலக வங்கி,
ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த போதிலும் பொருளாதார பாதிப்பு 2020ஐ விட குறைவுதான் என்றும் அடிப்படை கட்டமைப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களால் வளர்ச்சி கூடும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படக்கூடிய பாதிப்பு, பணவீக்கம் போன்றவற்றால் வளர்ச்சி ஓரளவு பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது: குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தகவல்!!
1 லிட்டர் பெட்ரோல் ரூ. 450 ஆக அதிகரிப்பு... இந்தியாவிடம் ரூ.38,000 கோடி கடன் கேட்க இலங்கை அரசு முடிவு!!
கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஜோ பைடன் பாராட்டு..!
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் தனி ஆளாக பேச்சுவார்த்தை நடத்த தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கல்?.. உறவினர் தகவல்
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!