போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் பாஜக பிரமுகர்கள்.. ஷாருக்கான் மகனை கைது செய்து அழைத்து வந்த போதும் உடன் இருந்தனர்!!
2021-10-07@ 11:12:23

மும்பை ; ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மற்றும் அவரது நண்பரை கைது செய்து அழைத்து வந்த போது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியுடன் இருந்தவர் தான் பாஜக கட்சியின் தீவிர விசுவாசி என தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் இருந்ததாக நடத்திய சோதனையே ஒரு நாடகம் என்றும் நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஆரியன் கான் மும்பை போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தை இருந்த போது, பாஜகவைச் சேர்ந்த மனிஷ் பன்சாலி மற்றும் கிரண் கோசவி ஆகிய இருவரும் அங்கு வந்து செல்வதும் ஆரியன்கான் உடன் செல்பி எடுத்துக் கொண்ட காட்சியும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து சென்றதை மனிஷ் பன்சாலியும் ஒப்புக் கொண்டார்.தகவல் கொடுப்பதற்காக வந்து சென்றதாகவும் தாம் பாஜகவின் தீவிர விசுவாசி என்றும் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஆரியன்கான் நண்பர் Arbaaz Merchant ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதை சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே தெரியும் என்றும் தான் இந்த வழக்கில் சிக்கவைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை
நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்
வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்
கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு
கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!