கொரோனா பரவல்.! பண்டிகை காலங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்: டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை
2021-10-01@ 21:43:20

டெல்லி: பண்டிகை காலங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்பு அதிகரிக்கலாம் என மத்திய அரசின் குழுவும் அறிவுறுத்தியது.
சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வந்தாலும் பண்டிகை காலம் நெருங்க உள்ளதால் மக்கள் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா, பண்டிகை காலங்களான அடுத்து வரும் 6 முதல் 8 வார காலத்திற்கு அனைவரும் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட கால கட்டத்தை கடந்துவிட்டால் கொரோனா பாதிப்பு மேலும் பெருமளவு குறைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய படம்
பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை மனைவி, மகளை அறையில் அடைத்து கதவில் சுவர் எழுப்பிய கணவன்: ஐதராபாத்தில் பரபரப்பு
அருணாச்சல் எல்லையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது சீனா: ராணுவ தளபதி தகவல்
பீகாரில் விரைவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நிதிஷ் அறிவிப்பு
வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!