நேரடி வகுப்புக்கு எதிரான மனுவை ஏற்கக்கூடாது: தனியார் பள்ளிகள் ஐகோர்ட் கிளையில் மனு
2021-10-01@ 01:28:52

மதுரை: கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், நேரடி வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி தனியார் பள்ளிகள் நிர்வாக கூட்டமைப்பின் சார்பில் ஒரு மனு செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த கல்வி முறையும் பாதித்துள்ளது. ஆன்லைன் கல்வி என்பது குழந்தைகளுக்கு போதுமானதல்ல. பல மாணவர்கள் மனரீதியாகவும், கண்கள் பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.
ஏழை மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் வசதி குறைவு. 175 நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 1.60 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குழந்தைகள் பாதிப்பர் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை. எனவே, நேரடி வகுப்பிற்கு எதிரான மனுவை ஏற்கக்கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
கடலூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை
மழையால் விற்பனை சரிவு அறுவடை செய்யாமல் வயல்களிலேயே கிர்ணி பழத்தை விட்டு செல்லும் அவலம்: சீர்காழி விவசாயிகள் கவலை
மது போதையில் மரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் : வேலூரில் பரபரப்பு
அடுத்த நிலைக்கு செல்ல முடியாததால் மனநிலை பாதிப்பு சதுரங்கப்போட்டியில் வென்ற பரிசுகளை சாலையில் காட்சிப்படுத்திய வீரர்
மயிலம் அருகே ஆட்டோ மீது கார் மோதி 2 பேர் படுகாயம் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரி தாக்கி கார் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்
அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம் : 800 காளைகள் சீறிப்பாய்ந்தன
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!