ஆம்பூர் அருகே பாதையை அடைத்ததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை-அதிகாரிகள் சமரசம்
2021-09-24@ 11:40:14

ஆம்பூர் : ஆம்பூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்த பாதையை அடைத்ததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் அதிகார்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட வன்னியநாதபுரம் அருகே பெருமாள் குட்டை பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல தனியாருக்கு சொந்தமான இடத்தை வழியாக சுமார் 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தனியார் நிலத்தின் உரிமையாளர் நேற்று அந்த இடத்தில் முள்வேலி அமைத்து வழியை அடைத்ததாக கூறி அப்பகுதியினர் ஊராட்சி மன்ற அலுவகம் மற்றும் விஏஓ அலுவலகங்கள் உள்ள வளாகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு அரசு உடனடியாக உரிய வகையில் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகளிடம் கூறினர். மேலும், இந்த பிரச்னை தீர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தங்களது வீட்டு பட்டாக்களை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வருவாய் துறையினர், இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய ஏற்பாடு செய்யப்பட்டும் என்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகள்
பாலியல் புகாரின் கைதானபாஜ நிர்வாகியின் காவல் நீட்டிப்பு
சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை
தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி ஆர்ப்பாட்டம்; தனியாக ஆயுதப்படையை உருவாக்கி தேர்தலுக்கு பயன்படுத்த பா.ஜ திட்டம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!